Wednesday 26 October 2016

பழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள்*❗

பழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள்*❗

*1.* தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது.
அவை,
நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும்,
பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால்
பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம். கிடைப்பது மிக புண்ணியம்.

*2.* ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.

*3.* இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள்
முடிந்துவிடும்.

*4.* அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

*5.* இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின்
புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தானம் வைக்க படும். முன் காலத்தில் சந்தன காப்பை முகத்திலும்
சார்த்தி கொண்டிருந்தனர். பின்னர் இந்த முறை மாற்றப்பட்டது.

*6.* தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர்
வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம்
செய்கிறார்கள்.

*7.* தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம்.

*8.* அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

*9.* இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் - ஒன்பது வருடம்.

*10.* அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார்.

*11.* இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.

*12.* 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.

*13.* இது பொது நல எண்ணத்துடன்
செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக்கொண்ட சித்தர்களுக்கு உதவி செய்ததாக ஒரு தகவல்.

*14.* அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று புராண தகவல்.

*15.* போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

*16.* கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும்,
நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம். சித்தர் தான் என்று பலரின் எண்ணம்.

*17.* தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்றால், தீபம் காட்டினால் மட்டும் தான் அதை பார்க்க முடியும்.

*18.* பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இரண்டுமே போகர் பூஜை செய்ததாக தகவல்.
[24/10 6:30 pm] ‪+91 88001 02201‬: இந்த உலகத்தில் உள்ள அணைத்து
நோய்களுக்கும் ஒரே மருந்து இருந்தால் எப்படி
இருக்கும்? இதை கேள்வியை உலகில் உள்ள
நவீன விஞ்சானிகளிடமோ அல்லது
மருத்துவரிடமோ கேட்டால் இது
முட்டாள்தனமான கேள்வி இது சாத்தியமே
இல்லை என்பார்கள். ஆனால் இதே கேள்வியை
தமிழனிடம் கேட்டால் சாத்தியம் என்பான். ஆம்
இதைதான் பல ஆயிரம்வருடம் முன்பே 18
சித்தர்களில் ஒருவரான மாபெரும் தமிழ் சித்தர்
போகர்க்கு தோன்றிய சிந்தணையில் உதித்த
மருந்துதான் நவபாஷாணம். இதற்காக அவர்
மூலிகைகள் ஆராய்ச்சியில் இறங்கினார்
கிட்டத்தட்ட 4448 மூலிகைளை உபயோகித்து
அதை 81 பாஷாணங்களாக மாற்றி இந்த
பாஷாணங்களை 9 பாஷாணங்களாக பிரித்து
எடுத்தார் அவை(கௌரிபாஷானம்
,கெந்தகபாஷானம்,சீலைபாஷானம்,வீர
ப்பாஷானம்,கச்சாலபாஷானம்,வெள்ளை
பாஷானம் தொட்டிபாஷானம்,ச
ூதப்பாஷானம்,சங்குபாஷானம் ஆகும்)இந்த 9
பாஷானங்களை 9 விதமான எரிபொருளை
கொண்டு சூடு பண்ணி பூமியில்
குழிதோண்டி இந்த 9 பாஷாணங்களை
புதைத்து குறிப்பிட்ட நாளில் எடுத்து
மருந்தாக மக்களுக்கு கொடுத்தார்.இந்த
நவபாஷாணம் உலகில் நிறைய இடங்களில்
இருக்கு என்று கூறினாலும் நிருபிக்கபட்டது
பழனி முருகன் சிலை மட்டுமே. இதில் நிறைய
சந்தேகங்கள் தோன்றலாம் இதை ஏன் சிலையாக
வடித்தார் மருந்தாகவே மக்களுக்கு
கொடுத்திருக்கலாமே என்று. இதைபற்றி
இன்னொரு தகவல் என்னவேன்றால்
நவபாஷானத்தை போகர் கண்டுபிடித்தது
மனிதனின் நோயை போக்குவதற்கு இல்லை
மனிதனை இறப்பே இல்லாமல்
செய்வதற்குதான் கண்டுபிடித்தார் என்று சில
சித்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்
கண்டுபிடித்த நவபாஷாணத்தை பற்றி
கேள்விபட்ட மற்ற சித்தர்கள் போகரை நீ
இயற்கை விதிக்கு எதிராக செயல்படுகிறாய்
இந்த நவபாஷானத்தை உடனே அழித்து விடு
என்று அறிவுரை கூறினார்கள்.உடனே தன்
தவறை உணர்ந்த போகர் அந்த பாஷாணங்களை
அழிக்க மணமில்லாமல் அதை பொதுமக்கள்
யாரும் பயன்படுத்தமுடியாது படி
முருகன்சிலையாக செய்து பழனியில் வைத்து
விட்டார்.இந்த கதையை கேட்டவுடன் சில
பேருக்கு சிரிப்பு வரலாம் அது எப்படிங்க
மனிதன் இறப்பே இல்லாமல் வாழ முடியும்
என்று இதை உங்களுக்கு அறிவியல்
பூர்வமாகவே விளக்குகிறேன் அதாவது
இப்போம் உள்ள dna(மரபனு) ஆராய்ச்சியாளர்க
ள் என்ன கூறுகின்றனர் என்றால் ஒரு
மனிதனின் மரபனுவை சுத்திகரிப்பதன் மூலம்
இளமை மாறாமல் 1200 ஆண்டுகள் வாழலாம்
என்று கூறுகின்றனர் . அதை போல் இந்த
நவபாஷாணம் ஏன் நமது மரபனுவை
சுத்திகரித்து இறப்பை தடுக்ககூடாது. ஏது
எப்படியோ இந்த நவபாஷானத்தை நமது
அரசாங்கம்தான் ஆய்வுக்கு உட்படுத்தி
அதோடு உண்மை தன்மையை உலகுக்கு
தெரியபடுத்த வேண்டும

மக்கள் அனைவரும் சித்தர்களின்
இரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டும்
என்பது என் நோக்கம்.

கிருஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகள்
முன்னாடி பிறந்தவர் போகர் என்ற மாபெரும்
சித்தர் இவர் காளாங்கிநாதர் என்ற சித்தரின்
சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார் இவர்
பழனியில் இருக்கும் நவபாஷான சிலையை
செய்தவரும் இவர்தான்.இவரை பற்றிய தகவல்
மிக ஆச்சரியத்தை கொடுக்கும்.இவரை பற்றிய
ஒரு தகவலை அவர் இயற்றிய சப்தகாண்டம்
என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட தகவலை
படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று
விட்டேன் .இப்பேர்பட்ட தமிழனை உலகம்
முழுவுதும் தெரியபடுத்த வேண்டும் என்பதே
என் நோக்கம்.அவர் இயற்றிய அந்த நூலில்
1799, 1800 ஆம் பாடலில் விமான
தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும்
அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை
வைத்து அவர் பறந்ததையும் தெள்ளதெளிவாக
கூறிப்பிட்டிருக்கிறார் அது மட்டும் அல்ல
1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின்(steam
engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது
என்றும் கப்பலின் டிசைனிங்கையும்
குறிப்பிட்டிருக்கிறார் இதை 5000 ஆண்டுகள்
முன்பே தமிழன் கண்டுபிடித்துவிட்டான்
என்பது நமக்கெல்லாம் பெருமை ஆனால்
அப்பேர்பட்ட தமிழனை நாம் மறந்து விட்டோம்
என்பது வேதனையளிக்கிறது. தமிழனின் புகழ்
உலகம் முழுவதும் பரவவேண்டும் உலகத்தின்
முதல் இனமும் முதல்மொழியும் முதல்
அறிவியல் விஞ்சானியும் முதல்
மருந்துவனும் முதல் ஆன்மீகவாதியும்
தமிழனே.இப்படி தமிழனின் புகழை மறந்து
நாத்திகம் பேசியும் மதமாற்றம் செய்தும்
தமிழனின் பெருமை மறைக்கபட்டுவிட்டது

நன்றி:- சித்தர் சபை

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review