Wednesday 26 October 2016

தந்தையும் மகளும் கோயிலுக்கு செல்கின்றனர்.

தந்தையும் மகளும் கோயிலுக்கு செல்கின்றனர்.

திடீரென மகள் அங்கே தூணில் உள்ள சிங்கத்தின் சிற்பத்தை பார்த்து " அப்பா ஓடுங்கள் இல்லைஎன்றால் அந்த சிங்கம் திண்றுவிடும்"

அப்பா மகளிடம் "அது சிற்பம்தான் ஒன்றும் செய்யாதது"

மகள் அப்பாவிடம் "சிங்கத்தின் சிற்பம் நம்மை ஒன்றும் செய்யாது என்றால் கடவுளின் சிற்பம் நமக்கு என்ன செய்யும்"

தந்தையிடம் பதில் இல்லை..........

எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்

எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:-
1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.
6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.
7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.
8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.
9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.
10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.
11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.
12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.
13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களைய
ே பேசுங்கள்.
14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.
15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.
16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.
17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.
18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.
19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.
20.உங்கள் நேரத் திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.
21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.
22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொண்டிரா தீர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.
23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.
24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவது தான் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்.
25. உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.
- வாழ்க வளமுடன்

"ஆங்கிலத்தில் 1000 வார்த்தைகளுக்கு "A" என்ற எழுத்தே இல்லாமல் உங்களுக்கு பதில் சொல்லத்தெரியுமா?..."

👏👏👏👏�👏�👏�👏�👏�👏�👏�👏�

1965ம் ஆண்டுவாக்கில்,
பேரறிஞர் அண்ணா அவர்கள்,
பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
அப்போது பாராளுமன்ற கூட்டத்தொடர்
நடந்துகொண்டிருந்த சமயம்.
அவர் டெல்லியில் இருந்தார்.
அண்ணா டபுள் M.A. படித்து,
ஆங்கில இலக்கியத்தில் புலமைபெற்றவர்.
பாராளுமன்றத்தில் சர்வசாதாரணமாக
அவர் ஆங்கிலத்தில் பேசுவார்.

அந்தசமயம் ஒரு இளவயது
டெல்லி பத்திரிகை நிருபர் ஒருவர்
பாராளுமன்றத்தைவிட்டு
வெளியேவந்த அண்ணாவிடம்,
"நான் தங்களை பேட்டி எடுக்க விரும்புகிறேன்..."
என்றார்.
அண்ணாவும் பேட்டிகொடுக்க
சம்மதித்து பேட்டிக்கு தயாரானார்.

நிருபர் துணிச்சலாக
"உங்களிடம் எதைப்பற்றி கேள்வி கேட்டாலும்
சுலபமாக உடனே பதில் சொல்வீர்களாமே...
நான் கேட்கும் கேள்விக்கு
உங்களால் பதில் சொல்லமுடியுமா?..."
என்றார்.

அண்ணாவும் "கேளுங்க தம்பி..."
என்றார் ஆங்கிலத்தில்.

உடனே நிருபர் கேட்டார்...
"ஆங்கிலத்தில் 1000 வார்த்தைகளுக்கு
"A" என்ற எழுத்தே இல்லாமல்
உங்களுக்கு பதில் சொல்லத்தெரியுமா?..."
என்றார்.

உடனே அண்ணா சற்றும் தாமதிக்காமல்,
"தம்பி, 1 முதல் 999 வரை
ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளுங்கள்.
கடைசியில் STOP என்று
ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளுங்கள்..."
என்றார்.

இந்தபதிலை கொஞ்சமும்
எதிர்பார்க்காத நிருபர்
உடனே அண்ணாவிடம்
மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

அன்றுதான் நிறையபேருக்கு
தெரிய ஆரம்பித்தது
1 முதல் 999 வரை ஆங்கிலத்தில்
"A" என்ற எழுத்தே வராது என்று.
படித்ததில் பிடித்தது

👏👏👏👏�👏�👏�👏�👏�👏�👏�👏

*Who Will Cry When You Die?" ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்

*Who Will Cry When You Die?"           ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...*

*அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...*
*“நீ பிறந்த போது, நீ* *அழுதாய்...உலகம் சிரித்தது..*.
*நீ இறக்கும் போது,    பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...*

*1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்)கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்..*.

*2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.*

*3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.*

*4. அதிகாலையில் எழ பழகுங்கள்*.
*வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.*

*5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.*
*அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.*

*6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.*
*எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.*

*7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.*

*8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.*

*9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்*.

*10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.*

*11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.*

*12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.*

*13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்*.

*14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.*

*15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்*.

*16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.*

*17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.*

*18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.*

*19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள்.* *வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!*
*"ஆணவம் ஆயுளை குறைக்கும்...*"

*மேற்கண்ட* *கருத்துக்களை பின் பற்றி,*
*ஆனந்தமாக வாழுங்கள்* *நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியதை அனுப்பியுள்ளேன்.....!!!!*

தீபாவளியும்&நானும

தீபாவளியும்&நானும்...😍

சின்ன வயசுல அப்பா புதுவருச காலண்டர் வாங்கின உடனே முதல பாக்குற முக்கியமான விஷயம் தீபாவளி எப்ப வருது ...எத்தினி நாள் லீவு வருதுனு தான்...??? அப்பிடி பாத்து பாத்து தீபாவளியை ரசிச்சி கொண்டாடின கடைசி தலைமுறை நாம தான்....😍😍😍😍
தீபாவளிக்கி 45 நாள் முன்னாடியே ஸ்கூல்ல பசங்ககிட்ட என்னா டிரஸ் எடுக்கணும்...என்னா வெடி வாங்கணும்னு திட்டம் போட்ட காலம் எல்லாம் இப்ப நினைச்சாலும் மனசு சின்ன புள்ளயா மாறிடும்...அதுலையும் வெங்காய வெடி&அணுகுண்டு வெடிக்கிறவனை எல்லாம் வாய பொளந்துகிட்டு பாப்போம்...ஜீன்ஸ் எடுக்கணும் டீசர்ட் எடுக்கணும்னு பிளான் போட்டுட்டு கடைசிலா குடும்ப சூழ்நிலை  காரணமா ஏதாவது ஒரு டிரஸ் கிடைச்சா போதும்னு அழுத நாட்கள் எல்லாம் இன்னும் கண்ணுக்குள்ளே இருக்கு...என்னா தான் இன்னிக்கி சொந்தமா சம்பாரிச்சி மெகா மார்ட்லையும்,ரேமண்ட் ஷாப்புலையும் 3000ரூபாய்க்கி டிரஸ் எடுத்தாலும் அன்னிக்கி அப்பா தீபாவளிக்கி முதல் நாள் கூட்டிட்டு போய் எடுத்து குடுத்த 250ரூபாய் டிரஸ்சோட மதிப்பு எல்லாம் சொல்லவே முடிலா...!!!
அதே மாறி தீபாவளிக்கி ஒரு வாரம் முன்னாடி வீட்டுல முறுக்கு சுடுறப்ப அந்த திருவிழா கொண்டாட்டம் மனசுக்குள்ள வந்துரும்...
தீபாவளி முதல் நாள் நைட்டு பசங்க எல்லாம் வீட்டுல இருந்து சேத்து வச்ச காச(ஆட்டைய போட்ட காசும் தான் 😉)

தீபாவளி முதல் நாள் கூட்டத்துல விடியற்காலை 3மணி வரை ஊரை ரவுண்ட் அடிச்சிட்டு வழியில பாக்குற தெரிஞ்ச பசங்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லிட்டு...6மணிக்கே எந்திரிச்சி எண்ணெய் தேய்ச்சி குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுகிட்டு...7மணி மொத ஷோ படத்துக்கு போய் தியேட்டர்லா தொண்டை கிழிய கத்தி பிடிச்ச ஹீரோவோட படத்தை பாத்து,அப்பிடியே ப்ரண்ட் வீட்டுல சாப்புட்டு...மத்தியானமே இன்னோரு படத்துக்கு போய் பாத்துட்டு தீபாவளியை கொண்டாடிய நாட்கள் எல்லாம் திரும்ப வராது...அதெல்லாம் உலக நாயகன் சொல்லுற படி ஆராயக்கூடாது அனுப்பவிக்கனும்..😍😍😍
இன்னும் எழுத எழுத நிறைய தோணுது...

இப்பவும் தீபாவளி கொண்டாடுறாங்கா..அடையார் ஆனந்தபவன்ல அரைகிலோ ஸ்வீட்டு வாங்கிட்டு..அமேசான்ல டிரஸ் எடுத்துட்டு..😠😠😠
ஒண்ணு மட்டும் நிச்சயம்   பணம்,சம்பாத்தியம்&கார்ப்ரேட் வாழ்க்கைனு ஒரு மாயவலையை உருவாக்கி வாழ்க்கையோட சின்ன சின்ன சந்தோஷங்களை அதுல இழந்துகிட்டு வரோம்...:(

#Advance_Diwali_Wishes...!!!

பழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள்*❗

பழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள்*❗

*1.* தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது.
அவை,
நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும்,
பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால்
பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம். கிடைப்பது மிக புண்ணியம்.

*2.* ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது.

*3.* இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள்
முடிந்துவிடும்.

*4.* அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

*5.* இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின்
புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தானம் வைக்க படும். முன் காலத்தில் சந்தன காப்பை முகத்திலும்
சார்த்தி கொண்டிருந்தனர். பின்னர் இந்த முறை மாற்றப்பட்டது.

*6.* தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர்
வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம்
செய்கிறார்கள்.

*7.* தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும். இது போகரின் கை வண்ணம்.

*8.* அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

*9.* இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் - ஒன்பது வருடம்.

*10.* அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்ச்சியே எடுத்தார்.

*11.* இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார்.

*12.* 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி தயார் பண்ணினர்.

*13.* இது பொது நல எண்ணத்துடன்
செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக்கொண்ட சித்தர்களுக்கு உதவி செய்ததாக ஒரு தகவல்.

*14.* அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று புராண தகவல்.

*15.* போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

*16.* கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும்,
நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம். சித்தர் தான் என்று பலரின் எண்ணம்.

*17.* தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்றால், தீபம் காட்டினால் மட்டும் தான் அதை பார்க்க முடியும்.

*18.* பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இரண்டுமே போகர் பூஜை செய்ததாக தகவல்.
[24/10 6:30 pm] ‪+91 88001 02201‬: இந்த உலகத்தில் உள்ள அணைத்து
நோய்களுக்கும் ஒரே மருந்து இருந்தால் எப்படி
இருக்கும்? இதை கேள்வியை உலகில் உள்ள
நவீன விஞ்சானிகளிடமோ அல்லது
மருத்துவரிடமோ கேட்டால் இது
முட்டாள்தனமான கேள்வி இது சாத்தியமே
இல்லை என்பார்கள். ஆனால் இதே கேள்வியை
தமிழனிடம் கேட்டால் சாத்தியம் என்பான். ஆம்
இதைதான் பல ஆயிரம்வருடம் முன்பே 18
சித்தர்களில் ஒருவரான மாபெரும் தமிழ் சித்தர்
போகர்க்கு தோன்றிய சிந்தணையில் உதித்த
மருந்துதான் நவபாஷாணம். இதற்காக அவர்
மூலிகைகள் ஆராய்ச்சியில் இறங்கினார்
கிட்டத்தட்ட 4448 மூலிகைளை உபயோகித்து
அதை 81 பாஷாணங்களாக மாற்றி இந்த
பாஷாணங்களை 9 பாஷாணங்களாக பிரித்து
எடுத்தார் அவை(கௌரிபாஷானம்
,கெந்தகபாஷானம்,சீலைபாஷானம்,வீர
ப்பாஷானம்,கச்சாலபாஷானம்,வெள்ளை
பாஷானம் தொட்டிபாஷானம்,ச
ூதப்பாஷானம்,சங்குபாஷானம் ஆகும்)இந்த 9
பாஷானங்களை 9 விதமான எரிபொருளை
கொண்டு சூடு பண்ணி பூமியில்
குழிதோண்டி இந்த 9 பாஷாணங்களை
புதைத்து குறிப்பிட்ட நாளில் எடுத்து
மருந்தாக மக்களுக்கு கொடுத்தார்.இந்த
நவபாஷாணம் உலகில் நிறைய இடங்களில்
இருக்கு என்று கூறினாலும் நிருபிக்கபட்டது
பழனி முருகன் சிலை மட்டுமே. இதில் நிறைய
சந்தேகங்கள் தோன்றலாம் இதை ஏன் சிலையாக
வடித்தார் மருந்தாகவே மக்களுக்கு
கொடுத்திருக்கலாமே என்று. இதைபற்றி
இன்னொரு தகவல் என்னவேன்றால்
நவபாஷானத்தை போகர் கண்டுபிடித்தது
மனிதனின் நோயை போக்குவதற்கு இல்லை
மனிதனை இறப்பே இல்லாமல்
செய்வதற்குதான் கண்டுபிடித்தார் என்று சில
சித்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்
கண்டுபிடித்த நவபாஷாணத்தை பற்றி
கேள்விபட்ட மற்ற சித்தர்கள் போகரை நீ
இயற்கை விதிக்கு எதிராக செயல்படுகிறாய்
இந்த நவபாஷானத்தை உடனே அழித்து விடு
என்று அறிவுரை கூறினார்கள்.உடனே தன்
தவறை உணர்ந்த போகர் அந்த பாஷாணங்களை
அழிக்க மணமில்லாமல் அதை பொதுமக்கள்
யாரும் பயன்படுத்தமுடியாது படி
முருகன்சிலையாக செய்து பழனியில் வைத்து
விட்டார்.இந்த கதையை கேட்டவுடன் சில
பேருக்கு சிரிப்பு வரலாம் அது எப்படிங்க
மனிதன் இறப்பே இல்லாமல் வாழ முடியும்
என்று இதை உங்களுக்கு அறிவியல்
பூர்வமாகவே விளக்குகிறேன் அதாவது
இப்போம் உள்ள dna(மரபனு) ஆராய்ச்சியாளர்க
ள் என்ன கூறுகின்றனர் என்றால் ஒரு
மனிதனின் மரபனுவை சுத்திகரிப்பதன் மூலம்
இளமை மாறாமல் 1200 ஆண்டுகள் வாழலாம்
என்று கூறுகின்றனர் . அதை போல் இந்த
நவபாஷாணம் ஏன் நமது மரபனுவை
சுத்திகரித்து இறப்பை தடுக்ககூடாது. ஏது
எப்படியோ இந்த நவபாஷானத்தை நமது
அரசாங்கம்தான் ஆய்வுக்கு உட்படுத்தி
அதோடு உண்மை தன்மையை உலகுக்கு
தெரியபடுத்த வேண்டும

மக்கள் அனைவரும் சித்தர்களின்
இரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டும்
என்பது என் நோக்கம்.

கிருஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகள்
முன்னாடி பிறந்தவர் போகர் என்ற மாபெரும்
சித்தர் இவர் காளாங்கிநாதர் என்ற சித்தரின்
சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார் இவர்
பழனியில் இருக்கும் நவபாஷான சிலையை
செய்தவரும் இவர்தான்.இவரை பற்றிய தகவல்
மிக ஆச்சரியத்தை கொடுக்கும்.இவரை பற்றிய
ஒரு தகவலை அவர் இயற்றிய சப்தகாண்டம்
என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட தகவலை
படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று
விட்டேன் .இப்பேர்பட்ட தமிழனை உலகம்
முழுவுதும் தெரியபடுத்த வேண்டும் என்பதே
என் நோக்கம்.அவர் இயற்றிய அந்த நூலில்
1799, 1800 ஆம் பாடலில் விமான
தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும்
அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை
வைத்து அவர் பறந்ததையும் தெள்ளதெளிவாக
கூறிப்பிட்டிருக்கிறார் அது மட்டும் அல்ல
1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின்(steam
engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது
என்றும் கப்பலின் டிசைனிங்கையும்
குறிப்பிட்டிருக்கிறார் இதை 5000 ஆண்டுகள்
முன்பே தமிழன் கண்டுபிடித்துவிட்டான்
என்பது நமக்கெல்லாம் பெருமை ஆனால்
அப்பேர்பட்ட தமிழனை நாம் மறந்து விட்டோம்
என்பது வேதனையளிக்கிறது. தமிழனின் புகழ்
உலகம் முழுவதும் பரவவேண்டும் உலகத்தின்
முதல் இனமும் முதல்மொழியும் முதல்
அறிவியல் விஞ்சானியும் முதல்
மருந்துவனும் முதல் ஆன்மீகவாதியும்
தமிழனே.இப்படி தமிழனின் புகழை மறந்து
நாத்திகம் பேசியும் மதமாற்றம் செய்தும்
தமிழனின் பெருமை மறைக்கபட்டுவிட்டது

நன்றி:- சித்தர் சபை

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review